Showing posts with label india news. Show all posts
Showing posts with label india news. Show all posts

நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண்

 

திருநெல்வேலியில் நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண் முத்துலெட்சுமி. படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவ, மாணவிகளை போலீஸார் சோதனையிட்டனர்.

தேர்வு அறைக்குள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவற்றை அணியத் தடை செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களுக்குச் செல்லும் முன்னர் மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலெட்சுமி (20). இவர் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு எழுத வந்தார்.

நகைகளை கழற்ற அறிவுறுத்தல்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த இவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாலிச் செயின், மெட்டி, தலையில் பூ வைத்து வந்த முத்துலெட்சுமியை, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அங்கிருந்த அலுவலர்கள் நகைகளை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர். தாலிச் செயின் என்பதால் முத்துலெட்சுமி தயங்கியுள்ளார். ஆனால், தேர்வு விதிமுறைப்படி நகைகள் அணிய அனுமதியில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் வந்த அவரது கணவர் சம்மதம் தெரிவித்ததும், தாலிச்செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றி கணவரிடம் முத்துலெட்சுமி கொடுத்தார். தலையில் வைத்திருந்த பூவையும் எடுத்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதினார்.

விரைவில் - ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

விரைவில் ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான ‘ஸ்வானிதி’ திட்ட பயனாளர்களிடம், பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் உரையாற்றினார். இதில் ம.பி., மாநிலம் இந்தூர், குவாலியர் மற்றும் சாஞ்சி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஏழை, அடித்தட்டு மக்களை கொரோனா அதிகம் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவ அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஸ்வானிதி திட்டத்தில், ஆரம்ப கடன் தொகை ரூ.10 ஆயிரம், உஜ்வாலா திட்ட பலன்கள், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு ஆகியவற்றை பெறலாம்.

சாலையோர விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கடன் பெற்று, அதனை குறித்த காலத்தில் செலுத்தினால், படிப்படியாக கடன் தொகை அதிகரிக்கப்படும். இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம்.

ஸ்வானிதி திட்டத்தில், 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு 140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும், ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்கப்படும். விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள்

 

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் செப்.10 அன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்படுகின்றன.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்..

லண்டன்: ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களிடம் நடத்தப்படும் 3ம் கட்ட சோதனையின்போது தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. ரஷ்யா மட்டுமே தற்போது வரையில் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. ஆனாலும், அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. இதனையடுத்து தற்போது, மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும்,’ என்றார்.

400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள்

லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை பயன்படுத்தி இந்தியாவுக்குள் 400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாக்., ஏற்பாடு செய்துள்ள 400 பயங்கரவாதிகளும் இரு நாட்டு கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே உள்ள முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில் பாக்., சிறப்பு படைப்பிரிவு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஏதுவாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் எல்லைப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர இந்திய பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்த எல்லை குழுக்களை பாக்., ஏற்பாடு செய்துள்ளது. பயங்கரவாதிகள் குரஜ், மச்சல், கெரான் தங்கார், நவுகம் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள்.

ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒலியைவிட 6 மடங்கு அதிவேகத்தில் ஏவும் திறன் கொண்ட ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தின் சோதனையை டிஆர்டிஓ இன்று (திங்கள்கிழமை) ஒடிசாவில் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தைப் பெறும் 4-வது நாடு இந்தியா.

இந்த நிலையில், பிரதமர் மோடி இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள். ஒலியைவிட 6 மடங்கு அதிவேகமாக ஏவுவதற்கு, நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்கராம்ஜெட் என்ஜின், உதவியுள்ளது. இன்றைய தேதியில் வெகுசில நாடுகளிடம் மட்டுமே இந்தத் திறன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரை

 

அதிகமாகக் கடன் பெற்று, மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள். பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு வந்துவிடும்’ என, மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசை காங்., கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை மீண்டும் மீட்சிப் பாதைக்குக் கொண்டுவருவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

Here are are some concrete steps to raise money:

1. Relax the FRBM norm and borrow more this year

2. Accelerate disinvestment

3. Use the offer of USD 6.5 billion by IMF, WB, ADB etc

4. As last resort, monetize part of the deficit


மத்திய அரசு பணத்தைத் திரட்டிக்கொள்ள சில வழிமுறைகளைக் கூறுகிறேன்.
இந்த ஆண்டு நிதிப் பொறுப்பையும் பட்ஜெட் மேலாண்மையையும் சற்று தளர்த்தி அதிகமாகக் கடன் பெறுங்கள். அரசு நிறுவனங்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகள் விற்பதை விரைவுபடுத்துங்கள். உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை அளிப்பதாகத் தெரிவித்துள்ள 6,500 கோடி டாலர் நிதியை பயன்படுத்துங்கள். கடைசி முயற்சியாக, பற்றாக்குறையின் ஒரு பகுதியைப் பணமாக அச்சிடுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடவும், சந்தையில் தேவையை, நுகர்வை அதிகரிக்கவும் சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களில் 50 சதவீதம் பேருக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிடுங்கள். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவசமாக உணவு தானியத்தை வழங்கிடுங்கள். தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடுவதை அதிகப்படுத்துங்கள். உணவு தானிய இருப்பைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கிடுங்கள். மிகப்பெரிய அளவில் பொதுப் பணிகளைத் தொடங்கிடுங்கள். வங்கிகளுக்குத் தேவையான மறு முதலீடுகளை வழங்கிடுங்கள். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை வழங்குங்கள். இவை அனைத்துக்கும் பணம் தேவை. ஆகவே, கடன் பெறுங்கள். தயக்கம் காட்டாதீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.