Showing posts with label neet exam. Show all posts
Showing posts with label neet exam. Show all posts

நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண்

 

திருநெல்வேலியில் நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண் முத்துலெட்சுமி. படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் தாலிச்செயின், மெட்டியை கழற்றிய பின்னரே மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவ, மாணவிகளை போலீஸார் சோதனையிட்டனர்.

தேர்வு அறைக்குள் ஹேர்பின், நகைகள், கொலுசு போன்றவற்றை அணியத் தடை செய்யப்பட்டுள்ளதால், தேர்வு மையங்களுக்குச் செல்லும் முன்னர் மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலெட்சுமி (20). இவர் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு எழுத வந்தார்.

நகைகளை கழற்ற அறிவுறுத்தல்

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த இவருக்கு, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாலிச் செயின், மெட்டி, தலையில் பூ வைத்து வந்த முத்துலெட்சுமியை, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அங்கிருந்த அலுவலர்கள் நகைகளை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர். தாலிச் செயின் என்பதால் முத்துலெட்சுமி தயங்கியுள்ளார். ஆனால், தேர்வு விதிமுறைப்படி நகைகள் அணிய அனுமதியில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடன் வந்த அவரது கணவர் சம்மதம் தெரிவித்ததும், தாலிச்செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றி கணவரிடம் முத்துலெட்சுமி கொடுத்தார். தலையில் வைத்திருந்த பூவையும் எடுத்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்.

 

 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்.

திருவாரூரில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: திருவாரூரில் தற்போது 460 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக 400 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூரில், அரசின் நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 10,014 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 8,321 சுய உதவிக்குழுக்களில் 93,960 உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவி குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.568 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சட்டசபை தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றியும், யார் தலைமையில் கூட்டணி என்பதையும் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம்

 

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளார்

சென்னை:
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்