பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள்

 

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் செப்.10 அன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்படுகின்றன.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.