பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ்

 

பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கு 2-வது முறையாக பாதிப்புக்குள்ளாகும் முதல் நபர் இவர்.
இதுபற்றி பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது:
“பெங்களூருவில் முதன்முறையாக 27 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் வீடு திரும்பினார். எனினும், ஒரு மாதத்துக்குப் பிறகு அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.”